இந்த வாரம் நான் தனிப்பட்ட உறவுகளின் அடிப்படைகளை பகிர்ந்து கொண்டு வருகிறேன். ஒவ்வொரு நிலையான, தனிப்பட்ட உறவுக்கும் வேத அடிப்படையானது ஒரு உடன்படிக்கை என்பதை நாம் பார்த்தோம். நேர்மட்ட தளத்தில், தேவனுடன் மற்றும் கிடைமட்ட தளத்தில், தேவனுடைய மக்களுடன். ஒருவரோடு ஒருவர் உடன்படிக்கை செய்துகொள்பவர்கள், தங்கள் சொந்த ஜீவனைக் கொடுக்க வேண்டும், பின்னர் தாங்கள் உடன்படிக்கையில் இருப்பவர்களுக்காக வாழ்வதில் ஒரு புதிய வாழ்க்கையைக் கண்டடைய வேண்டும்.

இவ்வழியில் மற்றவர்களுடன் உடன்படிக்கையில் நுழைவது ஒரு தனித்துவமான, புதிய வாழ்க்கை முறைக்குள் நம்மைக் கொண்டுவருகிறது. புதிய ஏற்பாட்டு கிரேக்கத்தில், இந்த புதிய வாழ்க்கை முறையை விவரிக்க ஒரு சிறப்பு வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அது கொயினோனியா என்ற வார்த்தை. பெரும்பாலான ஆங்கிலப் பதிப்புகளில், இந்த கிரேக்க வார்த்தை "ஐக்கியம்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒன்று அல்லது இரண்டு பதிப்புகள் அதை ஒரு வார்த்தையால் மொழிபெயர்க்காமல், "பொது வாழ்வில் பகிர்ந்து கொள்ளுதல்" போன்ற சொற்றொடரை பயன்படுத்துகின்றன. கிரேக்க பெயர்ச்சொல்லாகிய கொய்னோனியா, "கொய்னோஸ்" என்ற பெயர் உரிச்சொல்லில் இருந்து பெறப்பட்டது. இது "பொதுவானது" என்ற பொருளுடைய மிகவும் பொதுவான பெயர் உரிச்சொல் ஆகும். எளிமையாகவும், எழுத்தியல்பான அர்த்தமாகவும் பார்த்தால், கொயினோனியா என்றால் "பொதுவான விஷயங்களைக் கொண்டிருத்தல்" என்று பொருள்.

கொயினோனியா விவரிக்கும் வாழ்க்கை முறையை இன்று நான் உங்களுக்குக் காட்டப் போகிறேன். நான் முதலில், 1 யோவான் முதல் அதிகாரத்தின் 3ம் வசனத்திற்குத் திரும்பப் போகிறேன், அங்கு யோவான் இவ்வாறு கூறுகிறார்:

3 நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி [இங்கு koinonia], நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் [மீண்டும் koinonia] பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் இருக்கிறது.

"நாங்கள் கண்டதும் கேட்டதும்" என்று யோவான் கூறும்போது, அவர் உண்மையில் சொல்வது என்னவென்றால், "அப்போஸ்தலர்களாகிய நாங்கள் உங்களிடம் வைத்து சென்ற பதிவு", அதாவது புதிய ஏற்பாட்டு பதிவு – அதைப் பற்றித்தான் அவர் பேசுகிறார். ஆகவே, இங்கு மிக முக்கியமான ஒரு வாக்கியத்தை நாம் காண்கிறோம் – அதாவது, தேவன் எந்த இறுதியான நோக்கத்திற்காக புதிய ஏற்பாட்டின் பதிவையும், அப்போஸ்தலர்களுடைய சாட்சியையும் நமக்கு அளித்தார் என்பது. இந்தப் பதிவை நமக்கு வழங்கியதில், அதாவது புதிய ஏற்பாட்டையே நமக்குக் கிடைக்கச் செய்வதில் தேவனின் இறுதி நோக்கம் என்ன? இதற்கான பதில்: “நீங்கள் எங்களுடன் [அதாவது, அப்போஸ்தலர்களுடன்] ஐக்கியம் [கொய்னோனியா] கொள்ள வேண்டும்,” என்பதற்காக. அவர் மேலும் கூறுகிறார், “உண்மையில் எங்கள் ஐக்கியம் [அல்லது எங்கள் கொய்னோனியா] பிதாவுடனும் அவருடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவுடனும் உள்ளது."

ஆகவே, நற்செய்தி அல்லது சுவிசேஷம் என்பது இறுதியில் தெய்வத்துவத்தின் வாழ்க்கை முறையாகிய கொய்னோனியாவை பகிர்ந்து கொள்வதற்கான தேவனுடைய அழைப்பே என்று கூறுவது சரியானது என்று நான் நம்புகிறேன். தேவன் உண்மையில் விரும்புகிறார் என்று பார்ப்பது மிகவும் முக்கியம், ஏனென்றால் மத நடவடிக்கைகளில் பல சமயங்களில் நாம் "வழிகளை" எடுத்துக்கொள்கிறோம், அதனால் "முடிவுகளை" குறித்த தரிசனத்தை நாம் இழக்கிறோம். ஆனால் விரும்பிய முடிவை அடையாத "வழிமுறை" என்பது நேரத்தையும் முயற்சியையும் வீணடிப்பதாகும்.

பிரசங்கம் செய்வது ஒரு "முடிவு" அல்ல, அது ஒரு "வழிமுறை" என்று வெளிப்படையாக, ஒரு பிரசங்கியாக, சொல்கிறேன். அது விரும்பிய முடிவை அடைந்தால் மட்டுமே வெற்றியடையும். விரும்பிய முடிவு என்ன? கொய்னோனியா, ஐக்கியம், தேவனோடும் ஒருவரோடொருவரும் சேர்ந்து வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்வது. பல மதக் குழுக்களில், “நாம் உண்மையில் எதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம்?” என்று அவர்கள் தங்களையே கேட்டுக்கொண்டு, அதற்கு பின் "நாம் பயன்படுத்தும் வழிமுறைகள் உண்மையில் நாம் எதை இலக்காகக் கொண்டிருக்கிறோமோ அதை அடைகிறதா?" என்று தங்களை கேட்டுக்கொண்டால், அவர்கள் தங்கள் முழு நடைமுறையையும் முற்றிலும் மாற்றிவிடுவார்கள். ஒருமுறை நான் ஒரு தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை பிரசங்கித்தேன். செய்தியின் முடிவில் ஒரு அழகான, தேவ பிரசன்னம் நிலவியது. போதகர் எழுந்து நின்று, "இப்போது, தேவனுடைய பிரசன்னத்தின் அழகான உணர்வு இங்கே இருக்கிறது. விரைந்து வீட்டிற்கு செல்ல வேண்டாம். தங்கி, ஒருவரோடு ஒருவர் ஐக்கியம் கொள்ளுங்கள். அரை டஜன் மக்களுடன் கைகுலுக்குங்கள்" என்று கூறினார். நான் மனதிற்குள் நினைத்துக்கொண்டேன், “அய்யோ கடவுளே, இதுவா ஐக்கியம்? அரை டஜன் பேரிடம் கை குலுக்குகிறதா ஐக்கியம்? அதுதான் உம்முடைய மக்களுக்கு கிடைக்கும் ஐக்கியத்தை பங்கா?'' நிச்சயமாக, அது தெய்வீகத்தில் பிதாவுக்கு குமாரனுக்கு இடையே உள்ள உறவுமுறை அல்ல. ஞாயிற்றுக்கிழமை காலை கைகுலுக்குவதை விட இது இன்னும் ஆழமாக செல்கிறது.

பிதாவுடனான தன் உறவைப் பற்றி இயேசு சொன்ன சில விஷயங்களை நான் உங்களுக்கு சித்தரிக்கிறேன் – இவை எல்லாம் கொய்னோனியா என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். யோவான் 10:30ல் இயேசு சொன்னார்:

30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒற்றுமை அல்லது ஒன்றிணைதல் உள்ளது. பின்னர், பரிசுத்த ஆவியின் வருகையைப் பற்றி பேசுகையில், யோவான் 16ம் அதிகாரம், வசனங்கள் 14-15 இல், அவர் கூறினார்:

14 அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். 15 பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்.

அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று புரிகிறதா? ஏனென்றால், அவர் தனது சொந்த உரிமையில் எதையும் வைத்திருப்பதாகக் கூறவில்லை. என்னிடம் உள்ள அனைத்தும் பிதாவிடமிருந்து வந்தவை என்றார். இது என்னுடையது என்று நான் கூறினால், அதை பிதா எனக்குக் கொடுத்துள்ளார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பிதாவுடனான தனது உறவிலிருந்து சுயாதீனமாக எதையும் தனக்கு சொந்தமானது என்று இயேசு கூறவில்லை. அவர் வைத்திருந்த அனைத்தும் பிதாவுடனான உறவைச் சார்ந்தது என்கிறார். அதுதான் கொய்னோனியா. பின்னர், மீண்டும், யோவான் 17 ம் அதிகாரம் 10ம் வசனத்தில், இயேசு பிதாவிடம் ஜெபிக்கிறார், அவர் கூறுகிறார்:

10 என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; ...

அது சரியான கொய்னோனியா, எல்லாவற்றையும் சரியான நிலையில் "பொதுவாக கொண்டிருப்பது." என்னிடம் உள்ள அனைத்தும் உம்முடையது, உம்மிடம் உள்ள அனைத்தும் என்னுடையது. அதுதான் கொய்னோனியாவின் தெய்வீக நிலை. அதுதான் தெய்வத்துவத்தின் வாழ்க்கை முறை. நான் உங்களுக்கு இதைச் சொல்ல விரும்புகிறேன்: தேவன் கொய்னோனியாவை மனிதகுலத்தின் தாழ் நிலைக்குக் கொண்டுவரப் போவதில்லை, மாறாக தெய்வீக வாழ்க்கை முறையான கொய்னோனியாவின் நிலைக்கு அவர் மனுகுலத்தை உயர்த்த ஆயத்தமாக இருக்கிறார்.

யோவானின் முதல் நிருபத்தின் அதே முதல் அத்தியாயத்தில் இன்னும் கொஞ்சம் மேலே, யோவான் மீண்டும் இந்த கொய்னோனியாவின் கருப்பொருளுக்குத் திரும்புகிறார். உண்மையில், யோவானின் இந்த நிருபத்தின் முக்கிய கருப்பொருள்களில் கொய்னோனியாவும் ஒன்றாகும். வசனம் 7ல் அவர் கூறுகிறார்:

7 அவர் ஒளியிலிருக்கிறதுபோல [கிறிஸ்து வெளிச்சத்தில் இருக்கிறார் என்று கூறுகிறது, அதுதான் கொயினோனியாவின் தரநிலை, அது எப்போதும் தேவனுடைய தரம், மனிதனுடையது அல்ல] அவர் ஒளியிலிருக்கிறதுபோல, நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

அந்த வசனத்தின் தொடக்கத்தில் "போல்" என்ற சிறிய வார்த்தை பகுதி இருப்பதைப் பார்ப்பது முக்கியம். "போல்" ஒரு நிபந்தனையை அமைக்கிறது. நாம் ஏதாவது செய்தால், சில முடிவுகள் வரும். "போல்" என்றால் என்ன? "அவரை போல்" நாம் வெளிச்சத்தில் நடந்தால், இரண்டு முடிவுகள் பின்தொடர்கின்றன. முதலாவதாக, நாம் ஒருவருக்கொருவர் ஐக்கியம் (கொய்னோனியா) கொள்கிறோம். இரண்டாவதாக, இயேசுவின் இரத்தம் எல்லா பாவங்களிலிருந்தும் நம்மைச் சுத்திகரிக்கிறது. இயேசுவின் இரத்தத்தின் சுத்திகரிப்பு நமது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை நான் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நாம் நிபந்தனையை சந்திக்கும் போது மட்டுமே அது கிடைக்கும். நிபந்தனை என்ன? வெளிச்சத்தில் நடப்பது. நாம் வெளிச்சத்தில் நடந்தால், இரண்டு முடிவுகள் வரும். நாம் ஒருவரோடு ஒருவர் ஐக்கியம் (கொய்னோனியா) கொண்டிருப்போம், நாம் இயேசுவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்படுகிறோம்.

இது வேறு வழியிலும் பொருந்தும். நாம் வெளிச்சத்தில் நடக்கவில்லை என்றால், நமக்கு கொய்னோனியா இல்லை; நாம் இயேசுவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்படவில்லை. ஆகவே, இயேசுவின் இரத்தத்தின் தொடர்ச்சியான சுத்திகரிப்பு பெறுவதற்கு இன்றியமையாத நிபந்தனை வெளிச்சத்தில் நடப்பதாகும். நாம் வெளிச்சத்தில் நடக்கிறோம் என்றால், நாம் ஒருவருக்கொருவர் கொய்னோனியாவைப் பகிருகிறோம். நாம் கொய்னோனியாவில் இல்லை என்றால், அதாவது நாம் ஐக்கியத்தில் இல்லாமல் இருந்தால், நாம் வெளிச்சத்திற்கு வெளியே இருக்கிறோம். நாம் வெளிச்சத்திற்கு வெளியே இருந்தால், நாம் இனி இயேசுவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட மாட்டோம். ஆகவே, கொய்னோனியாவின் இந்த உண்மை எவ்வளவு மையமானது மற்றும் அத்தியாவசியமானது என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள்.

சரி, அப்படியானால். கொயினோனியாவுக்கான நிபந்தனைகள் என்ன? நான் உங்களுக்கு இரண்டு நிபந்தனைகளை பரிந்துரைக்க விரும்புகிறேன். முதலாவது உடன்படிக்கையின் அர்ப்பணிப்பு. ஒருவரோடொருவர் உடன்படிக்கையை உறுதிசெய்யத் தயாராக இருப்பவர்கள் மட்டுமே கொய்னோனியாவில் இருக்க முடியும். உடன்படிக்கையின் அர்ப்பணிப்பு கொய்னோனியாவுக்கான கதவு. உள்ளே செல்ல வேறு வழியில்லை. அதுதான் ஆரம்ப நிலை நிபந்தனை.

பின்பு, கொய்னோனியாவிற்கு ஒரு தொடரும் நிபந்தனை உள்ளது. தொடரும் நிபந்தனை என்னெவென்றால் வெளிச்சத்தில் நடப்பது. "ஒளியில் நடப்பது" என்றால் என்ன? மீண்டும், இரண்டு விஷயங்களை உள்ளடக்கியதாக நான் உங்களுக்கு பரிந்துரைக்க விரும்புகிறேன். முதலில், தேவனுக்குக் கீழ்ப்படிதல். கீழ்ப்படியாமை என்பது இருள். நாம் கீழ்ப்படிதலை விட்டு வெளியேறும் தருணத்தில், நாம் ஒளியிலிருந்து இருளில் நுழைகிறோம். நாம் தெய்வீக சட்டத்தை மீறும் தருணத்தில், நாம் இனி வெளிச்சத்தில் இல்லை. ஆனால் வெளிச்சத்தில் நடப்பதன் இரண்டாவது அம்சம் என்னவென்றால், நாம் ஒருவருக்கொருவர் முற்றிலும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும். இரகசியங்கள் இல்லை, தடை இல்லை, விமர்சனங்கள் அல்லது தீய எண்ணங்கள் நம் இதயங்களில் அல்லது மனதில் இல்லை, ஒருவருக்கொருவர் முழுமையான வெளிப்படையான மற்றும் நேர்மையாய் இருப்பது. வெளிச்சத்தில் நடப்பதைப் பற்றி யாரோ சொன்னார்கள், இதன் பொருள் இதுதான்: கூரை மற்றும் சுவர்கள் அகற்றப்படுதல். சரி, ஒருவேளை நம்மில் சிலர் கூரையை அகற்றிவிட்டு தேவன் உள்ளே பார்க்க அனுமதிப்பதைப் பொருட்படுத்த மாட்டார்கள், ஆனால் சுவர்களைக் கீழே இறக்கி, நம் சக விசுவாசிகளை உள்ளே பார்க்க அனுமதிக்கும்போது, அங்கே நாம் ஒரு கோட்டை வரைய விரும்புகிறோம். நாம் அங்கு கோடு வரைந்தால், நாம் கொய்னோனியாவில் இல்லை. நாம் வெளிச்சத்தில் நடந்தால்தான் கொய்னோனியா சாத்தியமாகும்.

அப்போஸ்தலர் 4ம் அதிகாரத்தில் உள்ள ஆரம்பகால சபையைப் பற்றிய இந்த வாக்கியத்தை பாருங்கள். நீங்கள் தொடர்பை காண வேண்டும் என்று விரும்புகிறேன். வசனம் 32:

32 ... ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.

அது என்ன - "சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது"? அது கொய்னோனியா. கொய்னோனியா என்ற வார்த்தையே "பொது" என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது. விளைவு என்ன? வசனம் 35ஐப் பாருங்கள்:

35 அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை...

நாம் கொயினோனியாவில் இருக்கும்போது தேவனுடைய ஆசீர்வாதங்கள் அவருடைய மக்கள் மீது இருக்கும். நமக்குத் தேவையான அனைத்தும், அதற்கு அதிகமாகவும் நம்மிடத்தில் அப்போது இருக்கும். ஆனால் கொய்னோனியாவுக்கு வெளியே வெளிச்சம் இல்லை.

வெளிச்சத்திற்கு வெளியே, இயேசுவின் இரத்தத்தால் இனி நாம் சுத்திகரிக்கப்படுவதில்லை. இது தெய்வீக உச்ச எச்சரிப்புகளில் ஒன்றாகும். தேவன் நம்மை கொய்னோனியாவிற்கு அழைக்கிறார், ஆனால் அவரே அதற்குரிய நிபந்தனைகளை ஏற்படுத்துகிறார்.

லைக்
பகிரவும்