டெரிக் பிரின்ஸ் ஊழியங்கள் பற்றி

உலகம் முழுவதும் மற்றும் முழு நேரமும், டெரிக் பிரின்ஸ் ஊழியங்கள் வேதத்தை போதித்து, தேவனுடைய வார்த்தையில் உள்ள வாழ்வை மாற்றும் வல்லமையை வேதாகம சத்தியத்தின் தீவிரமான தேவைகளில் இருக்கிற உலகத்துடன் பகிர்ந்துகொள்கிறது.

நாங்கள் யார்

மனிதர்கள் இயேசுவை சந்திக்கும்போது வாழ்க்கை மாறுகிறது என்று டெரிக் பிரின்ஸ் ஊழியங்கள் நம்புகிறது. அந்த சந்திப்பின் முழுமையில் வாழ, சீஷத்துவம் மற்றும் தேவனுடைய வார்த்தையின் சிறந்த கற்பித்தல் மூலமாக நாங்கள் விசுவாசிகளின் மனதை வளர்த்து, உள்ளத்தை ஊக்கப்படுத்தி, கரங்களை வெற்றிப்பெற செய்கிறோம்.

புகழ்பெற்ற சர்வதேச வேத ஆசிரியரான டெரிக் பிரின்ஸ் விட்டுச்சென்ற ஊழியம் தேவாலயங்கள், மிஷனரிகள், கிறிஸ்தவ கல்வியாளர்கள் மற்றும் உலகமெங்கும் உள்ள மில்லியன் கணக்கான விசுவாசிகளுக்கு வளங்களை தருகிறது.

எங்கள் பணி

நாங்கள் என்ன செய்கிறோம்

ஒவ்வொரு நாளும் நாங்கள் வேதத்தை போதித்து,விசுவாசிகள் முழுமையான விசுவாசத்திலும், ஞானத்திலும், சத்தியத்திலும் இயேசுவை பின்பற்றுவதற்கு அவர்களை ஆயத்தப்படுத்துகிறோம்.

டெரிக் பிரின்ஸ் அவர்களின் காலத்தால் அழியாத போதனைகள் மூலம், விசுவாசிகளுடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும், கட்டத்திலும் நாங்கள் சீஷத்துவம் செய்கிறோம். கிறிஸ்துவை மையமாகக் கொண்ட எங்கள் பிராந்திய அலுவலகங்கள் கிறிஸ்தவ சீஷத்துவத்தை முன்னணியில் வைத்து செயல்பட்டு, உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் பரந்த அளவிலான சேவைகள் மற்றும் வளங்களைக் கொண்டு ஆவிக்குரிய பசியை எதிர்த்து போராடுகின்றன. இதில் உள்ளடங்குவது:

தலைமைத்துவப் பயிற்சி:

உள்ளூர் திருச்சபைத் தலைவர்கள் மற்றும் போதகர்களுடன் இணைந்து, அதிகமாக தேவைப்படும் வளங்கள் மற்றும் கல்வி பொருட்களை வழங்கி, அடித்தட்டில் இருக்கும் ஊழியங்களை நாங்கள் பலப்படுத்துகிறோம்.

கல்வி வளங்கள்:

அச்சு, ஒலி, ஒளி மற்றும் ஆன்லைன் வடிவத்தில் கிடைக்கின்றன, எல்லா இடங்களிலுமிருக்கிற விசுவாசிகளை ஆயத்தப்படுத்த கல்வி வளங்களை வெளியிட்டு, விநியோகிக்கிறோம். நாங்கள் தயாரிக்கும் பெரும்பாலான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

மொழிபெயர்ப்பு:

மக்கள் தங்களுக்குப் புரியும் மொழியில் வேதத்தின் சிறந்த போதனைகளைப் பெற்றுக்கொள்வதை நாங்கள் உறுதி செய்வதே எங்களது வாஞ்சை.

வேதாகம பாடநெறிகள்:

நாங்கள் விசுவாசிகளை கற்பித்து தகுதிபடுத்தும் வகையில் பலவிதமான அஞ்சல் வழி பாடம் மற்றும் சுயமாய் வேதத்தைக் கற்பதற்கான பாடங்களை வழங்குகிறோம்.

ஆதரவு:

நாங்கள் தேவனுடைய வார்த்தையின் வல்லமையையும், அதிகாரத்தையும் மேம்படுத்தி, வீட்டிலும் சபையிலும் பள்ளியிலும் ஆன்லைனிலும் விசுவாசிகள் வேதத்தின் அறிவிலும் புரிதலிலும் வளர ஊக்கமளிக்கிறோம்.

புதிய முயற்சிகள்:

புதிய திட்டங்கள் மற்றும் முயற்சிகள் மூலம் டெரிக் பிரின்ஸ் ஊழியங்கள் முன்பைவிட அதிகமான மக்களை சென்றடைகிறது. எங்கள் டிஜிட்டல் அடையாளம் சமூக ஊடகங்கள், வீடியோக்கள், கட்டுரைகள், செயலிகள் மற்றும் பலவற்றின் மூலம் ஆன்லைனில் இணைப்பதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

வரலாறு

இது அனைத்தும் 1971-ஆம் ஆண்டு, டெரிக் பிரின்ஸ் ஃபுளோரிடாவின் ஃபோர்ட் லாடர்டேலில் உள்ள தனது வீட்டின் கேரேஜில் அலுவலகத்தைத் திறந்த போது தொடங்கியது. முதலில் டெரிக் பிரின்ஸ் பதிப்பகங்களாக அறியப்பட்டு, செழிப்பான வேதாகம போதனை ஊழியமாக பலனளித்தது, இது 1944-இல், கர்த்தர் அவரிடம் பேசியபோது விதைக்கப்பட்டது, அவர் சொன்னதாவது :

"நீ கிறிஸ்து இயேசுவில் உள்ள சத்தியத்திலும், விசுவாசத்திலும், அன்பிலும், வேதத்தை அநேகருக்கு போதிக்க அழைக்கப்பட்டிருக்கிறாய்"

இந்த வார்த்தைகள் ஆவிக்குரிய பசியில் இருப்பவர்களுக்கு உணவளிக்க டெரிக்கின் முயற்சிகளை வலுப்பெற செய்தது, "சுயமாய் வேதத்தைக் கற்பதற்கான பாடங்கள்" (1969), "விடுதலையாக்கும் சத்தியம்" (1966), "மனந்திரும்பி விசுவாசியுங்கள்" (1966) உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதி சுயமாக வெளியிட அவரைத் தூண்டியது. இந்த தலைப்புகளின் வெற்றிக்கும், தேவனுடைய உண்மைத்தன்மைக்கும் சான்றாக டெரிக் பிரின்ஸ் பதிப்புகள் அதிகமாக மேம்பட்டது.

1972-இல், தனி நபராக பணியை செய்த டெரிக்கின் செயலாற்றலைவிட தயாரிப்பு அதிகமாக வளர்ந்து, அவரின் மருமகனான டேவிட் செல்பி என்பவரை உதவிக்கு அழைத்தது. இருவரும் இணைந்து, அதிகமாக விரிவடைந்து வரும் இந்த ஊழியத்தின் பாதையை உருவாக்கி, வானொலி ஒளிபரப்பில் ஈடுபட்டு, புதிய புத்தகங்களையும் வெளியிட்டார்கள்.

1980களில், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, யுனைடெட் கிங்டம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வெளிநாட்டு அலுவலகங்கள் திறக்கப்பட்டன, இது தேசங்களில் சீஷர்களை உருவாக்கும் கனவை திடப்படுத்தியது. இந்த பத்தாண்டு காலத்தின் இறுதியில், டெரிக் உலக முழுவதும் மூன்று முறை வேதாகம போதனை பயணங்களை முடித்தார், அவரது வானொலி நிகழ்ச்சி ஆறு கண்டங்களிலும் பத்து மொழிகளில் பரவலாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

1990 ஆம் ஆண்டு, டெரிக் பிரின்ஸ் பதிப்புகளாக இருந்த பெயர் அதிகாரப்பூர்வமாக டெரிக் பிரின்ஸ் ஊழியங்களாக மாற்றம் செய்யப்பட்டது. இலவச வேதாகம போதனைப் பொருட்களின் விநியோகம் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 140 நாடுகளில் வழங்கப்பட்டது, தற்போது டெரிக் எழுதிய புத்தகங்கள் 50க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கின்றன.

இன்று, டெரிக் பிரின்ஸ் ஊழியங்கள் உலகம் முழுவதும் 45க்கும் மேற்பட்ட நாடுகளில் அலுவலகங்களை கொண்டுள்ளது, ஒவ்வொரு தேசத்திலும், கலாச்சாரத்திலும் மொழியிலும் வேதத்தை போதிப்பதற்கான முழு மனதுடன் உறுதியாக உள்ளது. 1941-ஆம் ஆண்டில் கர்த்தர் டெரிக்கிடம் பேசியதாகக் கூறிய தீர்க்கதரிசன வார்த்தையை இந்த ஊழியத்தின் வளர்ச்சியும் வெற்றியும் உறுதிப்படுத்துகிறது, அவர் சொன்னது:

"அது ஒரு சிறு நீரோடை போல் இருக்கும். அந்த சிறிய நீரோடை ஒரு நதியாக மாறும். அந்த நதி ஒரு பெரும் நதியாக மாறும். அந்த பெரிய நதி ஒரு கடலாக மாறும். அந்த கடல் ஒரு வலிமையான பெருங்கடலாக மாறும், அது உன் மூலமாக நிகழும்: ஆனால் எப்படி நடக்கும் என்பதை நீ அறிய கூடாது, நீ அறிய முடியாது, நீ அறியவும் மாட்டாய்."

இந்த வார்த்ததையில் இருந்த தேவனுடைய உண்மைத்தன்மையே டெரிக் பிரின்ஸ் ஊழியங்களை இன்று இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்துள்ளது, மேலும், இந்த ஊழியத்தை "வலிமையான பெருங்கடலாக" தொடர்ந்து கொண்டுவரும்.

டெரிக் பிரின்ஸ் எழுதிய, ஒலி மற்றும் ஒளி சார்ந்த பொருட்களின் பரந்த காப்பகத்துடன், ஊழியமானது தொடர்ந்து புதிய புத்தகங்களை வெளியிடுகிறது. இன்றுவரை, 100 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியிடப்பட்டு, 100க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

நாங்கள் எதை நம்புகிறோம்

விசுவாச அறிக்கை

  1. ‘‘தேவன் ஒருவரே - நித்தியமாக நிலைத்திருக்கிற உண்மையான, உயிருள்ள தேவன், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்று நபர்களாக இருக்கிறார்; அவர் ஆவியாகவே இருக்கிறார், எல்லையற்ற, நித்திய, அவரது அன்பு, இரக்கம், வல்லமை, ஞானம் மற்றும் நீதியில் மாற்றமில்லாதவராக இருக்கிறார். (ஏசாயா 45:22, சங்கீதம் 90:2; யோவான் 4:24; 2 கொரிந்தியர் 13:14)
  2. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன்; அவர் தனது கன்னிப்பிறப்பின் மூலம் அவதாரம் எடுத்தவர் ; அவர் தன் தெய்வத்துவத்திலும், மனித தன்மையிலும் பரிபூரணமானவர். அவர் தன் உயிரை சுய-விருப்பத்தினாலே மனிதனின் பாவங்களுக்காக ஒரே போதுமான மற்றும் பரிபூரண பதிலீடு செய்யும் பலியாக கொடுத்தார்; அவருடைய பாவநிவர்த்தியின் மூலம் மனிதன் பாவத்திற்கான தண்டனை, குற்ற உணர்வு மற்றும் குற்றவிளைவுகளிலிருந்து விடுதலையை அடைய முடியும்; அவர் மரித்தோரிலிருந்து சரீரபிரகாரமாக எழுந்து, மகிமையடைந்த சரீரத்தை கொண்டு அவர் இப்போது பரலோகத்தில் அமர்ந்து, விசுவாசிகளுக்காக பரிந்துபேசிக் கொண்டிருக்கிறார்; அவர் தனது ராஜ்யத்தை ஸ்தாபிக்க மீண்டும் தம்முடைய மகிமையடைந்த சரீரத்தில் வருகிறார் . (மத்தேயு 1:18–25; யோவான் 1:14; கொலோசெயர் 1:13–18; 1 பேதுரு 2:24; லூக்கா 24; எபிரெயர் 4:14; மத்தேயு 25:31–46)
  3. பரிசுத்த ஆவியானவர் பிதாவாகிய தேவனுடனும் குமாரனுமான தேவனுடனும் தெய்வத்துவத்தின் ஒவ்வொரு பண்புகளிலும் சமமாக இருக்கிறார்; கிறிஸ்துவை இரட்சகராகப் பெறுபவர்களில் மறுபிறப்பின் அதிசயத்தை செய்கிறார், இப்போது விசுவாசிகளில் வாழ்கிறார்; அவர்களை மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையிடுகிறார்; அவர்களுக்கு சேவைசெய்ய வல்லமை அளிக்கிறார்; கிறிஸ்துவின் சரீரமாகிய சபையைக் கட்டியெழுப்புவதற்காக கிருபை வரங்களை வழங்குகிறார். (எபேசியர் 4:30; 1 கொரிந்தியர் 6:19; 12:4, 7, 12-13; அப்போஸ்தலர் 1:5; தீத்து 3:5)
  4. உண்மை என்பது முழுமையானது மற்றும் குறிக்கோளுடையது. வேதாகமத்தின் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் மீட்பின் உண்மை முன்வைக்கப்பட்டுள்ளது, அது தேவன் மனிதனுக்கு அளித்த எழுதப்பட்ட வெளிப்பாடாகும், வாய்மொழியால் ஊக்குவிக்கப்பட்டு மூல பிரதிகளில் தவறில்லாமல் பதிக்கப்பட்டது. விசுவாசம் மற்றும் அதின் நடைமுறை ஆகிய எல்லா காரியங்களிலும் ,வேதாகமம்தான் உன்னதமான மற்றும் இறுதி அதிகாரமுடையது. (மத்தேயு 5:18; 2 தீமோத்தேயு 3:15–17; 2 பேதுரு 1:20–21)
  5. சபை என்பது பூமியில் கிறிஸ்துவின் ஒருங்கிணைந்த சரீரமாகும்; இது ஐக்கியத்திற்காகவும், சீர்பொருந்துதலுக்காகவும், கிறிஸ்தவ வாழ்க்கை மற்றும் சாட்சி மூலம் சுவிசேகஷத்தை எல்லா தேசங்களுக்கும் எடுத்துச்சொல்வடற்கும் உள்ளது. (மத்தேயு 28:19–20; அப்போஸ்தலர் 1:6–8, 2:41–42; 1 கொரிந்தியர் 12:13)
  6. மனிதன் தேவனின் சாயலில் படைக்கப்பட்டான், ஆனால் ஆதாமின் பாவத்தின் மூலம் தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டு நித்திய தண்டனைக்கு உட்படுத்தப்படான். மனிதனின் நிலைமைக்கு ஒரே தீர்வு, இயேசு கிறிஸ்துவினுடைய ஆள்தத்துவம் மற்றும் மீட்பின் கிரியையில், தனிப்பட்ட விசுவாசம் வைப்பதின் மூலம் இரட்சிப்பை பெறுவதே. (யோவான் 3:15–18; எபேசியர் 1:7; ரோமர் 10:9–10)
  7. வரையறுக்கப்பட்ட, இயற்கைக்கு அப்பாற்பட்ட ஜீவிகள் உள்ளன; அவைகளில் வீழ்ச்சி அடையாத தேவதூதர்கள், விழுந்துபோன தேவதூதர்கள் மற்றும் பிசாசுகளும் உட்படும். விழுந்துபோன தேவதூதரின் தலைவனான சாத்தான், தேவனுக்கும் மனிதனுக்கும் வெளியரங்கமான எதிரி , அக்கினிக் கடலில் அழிவுக்கென்று நியமிக்கப்பட்டுள்ளான். (எபிரெயர் 1:4–14; யூதா 6; மத்தேயு 25:41; வெளிப்படுத்துதல் 20:10)
  8. இரட்சிக்கப்பட்டவர்களுக்கும், கைவிடப்பட்டவர்களுக்கும் ஒரு உயிர்த்தெழுதல் இருக்கும்; இரட்சிக்கப்பட்டவர்கள் நித்திய ஜீவனுக்கும், இழந்துபோனவர்கள் நித்திய அழிவுக்கும் எழுந்டிருப்பார்கள். (1 கொரிந்தியர் 15; தானியேல் 12:1–2; யோவான் 5:28–29; 2 தெசலோனிக்கேயர் 1:7; மத்தேயு 5:1–10)
  1. ஏசாயா 45:22, சங்கீதம் 90:2; யோவான் 4:24; 2 கொரிந்தியர் 13:14
  2. மத்தேயு 1:18–25; யோவான் 1:14; கொலோசெயர் 1:13–18; 1 பேதுரு 2:24; லூக்கா 24; எபிரெயர் 4:14; மத்தேயு 25:31–46
  3. எபேசியர் 4:30; 1 கொரிந்தியர் 6:19; 12:4, 7, 12-13; அப்போஸ்தலர் 1:5; தீத்து 3:5
  4. மத்தேயு 5:18; 2 தீமோத்தேயு 3:15–17; 2 பேதுரு 1:20–21
  5. மத்தேயு 28:19–20; அப்போஸ்தலர் 1:6–8, 2:41–42; 1 கொரிந்தியர் 12:13
  6. யோவான் 3:15–18; எபேசியர் 1:7; ரோமர் 10:9–10
  7. எபிரெயர் 1:4–14; யூதா 6; மத்தேயு 25:41; வெளிப்படுத்துதல் 20:10
  8. 1 கொரிந்தியர் 15; தானியேல் 12:1–2; யோவான் 5:28–29; 2 தெசலோனிக்கேயர் 1:7; மத்தேயு 5:1–10
"வேதாகமம் தேவனுடைய சொந்த வார்த்தையாகும். அது எங்குமிருக்கிற அனைத்து மக்களுக்கும் தேவனுடைய பெரிய பரிசாக இருக்கிறது."

டெரெக் பிரின்ஸ்

முகப்புப் பக்கம்
வளங்கள்
+
வளங்கள்ஆன்லைன் ஸ்டோர்செய்திஊழிய தளங்கள்
நாங்கள்
+
எங்களோடு இணைய
+
தொடர்புக்கு
+
White Facebook iconWhite YouTube iconWhite Instagram iconX iconPinterest icon